1. Home
  2. தமிழ்நாடு

வரும் பிப்.23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் கச்சத்தீவு திருவிழா தொடக்கம்..!

1

கச்சத்தீவு திருவிழா வரும் பிப்ரவரி 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு மறுநாள் பிப்ரவரி 24- ஆம் தேதி கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடையவுள்ளது. இதில் இலங்கை, இந்திய பக்தர்கள் என சுமார் 8,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கச்சத்தீவு திருவிழாவையொட்டி பேசிய நெடுந்தீவு பங்குத்தந்தை பத்ரிநாதன், “கச்சத்தீவு புனித அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு தலா ஒருவருக்கு 1,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 23- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து கடைசி பேருந்து இயக்கப்படும்.இந்தியாவில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் இந்திய சட்ட விதிகளைப் பின்பற்றி தடைச் செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வர வேண்டாம்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Trending News

Latest News

You May Like