சசிகலா மற்றும் இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட்..!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது, சிறையில் சொகுசு வசதிக்காக ரூபாய் 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வழக்குப்பதிவுச் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இந்த வழக்கு நேற்று (செப்.04) விசாரணைக்கு வந்த போது, சசிகலா, இளவரசி தரப்பில் யாரும் ஆஜராகாததால், இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வரும் அக்டோபர் 05- ஆம் தேதி சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.