1. Home
  2. தமிழ்நாடு

கன்னட நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

1

சித்ரதுர்காவை சேர்ந்தவர் மருந்தக ஊழியர் ரேணுகாசாமி (வயது 33). இவர் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் பெங்களூருவில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அன்னபூர்ணேஸ்வரிநகர் போலீசார் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை கைது செய்துள்ளனர். இதில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 13 பேர் பரப்பன அக்ரஹாரா சிறையிலும், மீதமுள்ள 4 பேர் துமகூரு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடாவை குடும்பத்தினர் மற்றும் நடிகர்கள் சிலர் வந்து சந்தித்து செல்கின்றனர். சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 

இந்நிலையில் நேற்றுடன் நீதிமன்றம் காவல் முடிவடைந்தநிலையில், நேற்று நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 17 பேரையும் காணொலி காட்சியின் மூலம் பெங்களுர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தினர். அப்போது 17 பேரையும் வரும் ஜூலை 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like