1. Home
  2. தமிழ்நாடு

"இதுக்கே தாங்கலேய்யா" வெடித்துக் கிளம்பிய கமலஹாசன் !

"இதுக்கே தாங்கலேய்யா" வெடித்துக் கிளம்பிய கமலஹாசன் !


"ஒரு மணி நேர மழைக்கே தமிழகம் தாக்குபிடிக்கமுடியவில்லை. சாலைகள் எங்கும் நீரில் மிதக்கிறது " என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஆதங்கமும், ஆவேசமும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள் என நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like