1. Home
  2. தமிழ்நாடு

சனாதனம் பற்றி பேசியதால் கமலுக்கு கொலை மிரட்டல்..!

1

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜி-யுமான மௌரியா, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று இந்த புகாரை அளித்துள்ளார்.

அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், கமல்ஹாசன் சனாதானத்திற்கு எதிராக சில கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சின்னத்திரை நடிகரான ரவிச்சந்திரன், கமல்ஹாசனின் கழுத்தை அறுப்போம் என கொலை மிரட்டல் விடுத்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் காவல் ஆணையரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த மிரட்டல் குறித்து காவல் துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

Trending News

Latest News

You May Like