1. Home
  2. தமிழ்நாடு

ஓபிஎஸ்ஸுக்கு கல்தா! ஆட்சி மட்டுமல்ல... கட்சியையும் விட்டுக் கொடுக்காத எடப்பாடி!

ஓபிஎஸ்ஸுக்கு கல்தா! ஆட்சி மட்டுமல்ல... கட்சியையும் விட்டுக் கொடுக்காத எடப்பாடி!


தமிழகத்தில் 2021ல் நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரம் எடப்பாடிக்கு என்ற நிலையில் கட்சி அதிகாரத்தையும் எடப்பாடி விட்டுக் கொடுக்கவில்லை. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை மட்டுமே ஓபிஎஸ் அறிவித்தார். மற்றபடி வழிகாட்டும் குழுப் பட்டியல், வழிகாட்டும் குழுவில் மெஜாரிட்டி உறுப்பினர்களைத் தன் பக்கம் தக்க வைக்கவும் இபிஎஸ் மறக்கவில்லை.

ஓபிஎஸ்ஸுக்கு கல்தா! ஆட்சி மட்டுமல்ல... கட்சியையும் விட்டுக் கொடுக்காத எடப்பாடி!

அதிமுக தலைமைக் கழகத்தில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வில் ஓபிஎஸ் பேசிய போது கழக பொதுக்குழு தீர்மானித்தபடி வழிகாட்டும் குழுவின் நிர்வாகிகள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், அதிமுக இயக்கமும் ஆட்சியும் தொண்டர்கள் கையில் என்ற கனவை நனவாக்க துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார். ஆட்சி அதிகாரத்துடன் கட்சியில் தனக்கான இணை அதிகாரத்தையும் இபிஎஸ் விட்டுக் கொடுக்கவில்லை என்பதை வழிகாட்டும் குழு உறுப்பினர்களும் இபிஎஸ் 6 பேர், ஓபிஎஸ் 5பேர் என பங்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like