காடுவெட்டி குரு படத்தை வெளியிட தடை..?

வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் நிர்வாகியுமான காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் கவுதமன் படையாண்ட வீரர் என்ற படத்தை இயக்கி வருகிறார். காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி அவரது மனைவில் கல்யாணி மகள் விருதாம்பிகை மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் ஜெ குருவின் வாழ்க்கை வரலாற்றை தங்களின் குடும்பத்தினர் அனுமதி இன்றி படமாக எடுத்துள்ளனர் எனவும் எனவே இந்த படையாண்ட வீரர் திரைப்படத்துக்கு தடை விதிக்க விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குரு மனைவி மற்றும் மகள் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் கௌதமன் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.