#JUST IN : 10 நிமிடங்கள் உரையாற்ற உள்ளார் விஜய்..!
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய். கட்சி தொடங்குவதற்கு முன்பு கடந்த ஆண்டு, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து நடிகர் விஜய் பாராட்டு விழா நடத்தினார். அவர்களுக்கு சான்றிதழும், தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டிலும் அந்த பணியினை செய்ய தனது கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தியிருந்தார். கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக 10, 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 10, 12ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, முதற்கட்டமாக வருகிற 28ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஜூலை 3ஆம் தேதியும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி இந்நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் 10 நிமிடங்கள் பேச உள்ளார் விஜய் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்..
எபோதும் இசை வெளியீட்டு விழாவில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்வது நடிகர் விஜய் ஒரு வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் மாணவர்களுக்கு முன்னாடி அவர் என பேச போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
TVK Vijay | 10 நிமிடங்கள் உரையாற்ற உள்ளார் விஜய்#vijay #tvkvijay #tvk pic.twitter.com/gELqJCXZBL
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 27, 2024