1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN :- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு..!

Q

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் நடந்த சோதனையில் தங்க, வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். 

இதனிடையே ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டுமெனவும், அதன்மூலம் வரும் பணத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டுமெனவும் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் மனுதாக்கல் செய்தார். 

இந்நிலையில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகளை ஏலம் ஏலம் விடுவதற்கு பதில், அவற்றை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பது நல்லது என நீதிபதி தெரிவித்துள்ளார். அதே போல், கர்நாடகாவுக்கு வழக்கு கட்டணமாக ரூ.5 கோடி செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது 

Trending News

Latest News

You May Like