1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN :டி20 உலக கோப்பை அரையிறுதி - மழையால் போட்டி நிறுத்தம்..!

1

இண்டீசின் கயானா மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி லீக் சுற்றில் 3 வெற்றியுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

இதேபோல், இங்கிலாந்து அணி லீக் சுற்றில் 2 வெற்றியுடன் 5 புள்ளிகள் பெற்று 2வது இடத்தையும், சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. கடந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க இந்திய அணி கடுமையாக போராடும். அதே நேரத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டியில் அனல்பறப்பது நிச்சயம். 

இந்நிலையில்,  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து கோலி ஆட்டமிழந்தார். 

 கேப்டன் ரோகித் சர்மா 26 பந்துகளில் 37 ரன்கள் எடுத்துள்ளார். 6 பவுண்டரிகள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். 8 ஓவர்கள் முடிவில் இந்தியா 65 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

 

Trending News

Latest News

You May Like