1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!

1

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட சிறப்பு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், தாமிரபரணி ஆறு, அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து போன்றவைக் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்பு தொடர்பாக, மத்தியக் குழுவினர் ஆய்வுச் செய்து வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆலோசகர் கர்னல் கே.பி.சிங் தலைமையில் மத்திய குழுவினர் ஆய்வுச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வரலாறு காணாத மழையால் பாதிக்கபட்டுள்ள நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளையும் (டிச.21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 

Trending News

Latest News

You May Like