1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறீத்து அவதூறாக பேசிய ரங்கராஜன் நரசிம்மனுக்கு 14 நாட்கள் சிறை..!

1

திருச்சி ஸ்ரீரங்​கத்தை சேர்ந்​தவர் ரங்க​ராஜன் நரசிம்​மன். இவர் ‘Our Temples’ (நம்​முடைய கோவில்​கள்) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் மத ரீதி​யாக​வும், அரசியல் ரீதி​யாக​வும் பல்வேறு கருத்துகளை தெரி​வித்து வீடியோ வெளி​யிடுவதை வழக்​கமாக கொண்​டுள்​ளார்.

அந்த வகையில் ‘ஸ்ரீரங்கம் பெரிய பெரு​மாளுக்கு நடந்த அபச்​சா​ரங்​கள்’ என்ற தலைப்​பில் யூடியூப் சேனலில் கடந்த வாரம் வீடியோ வெளி​யிட்​டிருந்​தார். அதில், ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் சுவாமிகள் மீது பல்வேறு குற்​றச்​சாட்டுகளை முன்​வைத்​திருந்​தார். இதையடுத்து, தனது பெயருக்கு களங்கம் விளைவிக்​கும் வகையில் அவதூறு தகவல்களை பரப்பிய ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு சென்னை காவல் ஆணையர் அலுவல​கத்​துக்கு ஆன்லைன் வாயிலாக ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்​பில் புகார் மனு அளிக்​கப்​பட்​டது. காவல் ஆணையர் அருண் உத்தர​வின்​பேரில், மத்திய குற்​றப்​பிரிவு சைபர் க்ரைம் போலீ​ஸார் விசாரணை நடத்​தினர்.

தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் மீது 5 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்நிலை​யில், தனிப்படை போலீ​ஸார் ஸ்ரீரங்கம் சென்று ரங்க​ராஜனை அவரது வீட்​டில் கைது செய்​தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்தனர். 

 

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறீத்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனுக்கு 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.. 

 

Trending News

Latest News

You May Like