1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : கனவில் கூட நினைக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஜினிகாந்த் ஆவேசம்...!

Q

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்திடம் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார். மேலும் பேசுகையில்," காஷ்மீரில் அமைதியான சூழலை கெடுக்க எதிரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்குப் பின்னால் யார் இருந்தாலும் அவர்களுக்கு கனவில் கூட நினைக்காத அளவுக்கு கடும் நடவடிக்கை, தண்டனையை மத்திய அரசு வழங்க வேண்டும். இது போன்ற செயல்கள் மீண்டும் ஈடுபடுவதற்கு கனவில் கூட நினைக்கக் கூடாது" என்றார். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Trending News

Latest News

You May Like