#JUST IN : விபத்தில் சிக்கிய பயணிகள் ரயில்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/ad8da3388324566cfd4500c711c81b73.jpg?width=836&height=470&resizemode=4)
ஆந்திர மாநிலம் விசியநகரம் அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டது.
விஷாகா நகரில் இருந்து பவானிபட்டணத்திற்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடத்தில் இருந்து இறங்கி சாய்ந்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயிலை விட்டு கீழே இறங்கினர்.
ரயில் மித வேகத்தில் சென்றதால் பெருவிபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்தப்பினர்.