#JUST IN : பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்த புதிய நீதிக் கட்சி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/681efd31d85aae6009c9392281cbb835.jpg?width=836&height=470&resizemode=4)
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக இணைந்து 2019 மக்களவைத் தேர்தலை சந்தித்தன. ஆனால் 2021 சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. தற்போது பாஜக தனியாக மூன்றாவது கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது.
இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, இந்திய கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக வின் சின்னமான தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும் என்று அதன் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சற்று நேரத்திற்கு முன் சென்னை தி.நகரில் ஏ.சி.சண்முகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் பேட்டியளித்த ஏ.சி.சண்முகம், பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்தார்.