1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : மதிமுக கேட்டது பம்பரம்...கிடைத்தது தீப்பெட்டி சின்னம்..!

1

மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின் போதே துரை வைகோ மூன்று சின்னங்களை வலியுறுத்தி இருந்தார். அதில் முதல் சின்னமாக பம்பரம் சின்னத்தையும், இரண்டாவதாக தீப்பெட்டி சின்னம், மூன்றாவதாக கேஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டிருந்தார். ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், மாற்று சின்னத்தை பெற மதிமுக முயன்று வருகிறது.

துரை வைகோ மாற்றாக கேட்டிருக்கும் தீப்பெட்டி சின்னத்தையும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கேட்டுள்ளார். மதிமுக அங்கீகாரம் இல்லாத கட்சியாக இருந்தாலும் பதிவுபெற்ற அரசியல் கட்சியாக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் தீப்பெட்டி சின்னம் கிடைக்கும் என மதிமுக வட்டாரம் எதிர்பார்த்து காத்துள்ளது.

இந்நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கி  மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப்குமார் அறிவித்துள்ளார். மதிமுக பம்பரம் சின்னம் கோரியிருந்த நிலையில் தற்போது தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like