#JUST IN : இரவோடு இரவாக மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் கைது..!
தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள் நிர்வாகம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவராக உள்ள அகோரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக ஆதீனத்தின் சகோதரரும், உதவியாளருமான விருதகிரி அளித்த புகாரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதில், தருமபுரம் ஆதீனம் தலைமை பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் சகோதரலும் உதவியாளரும் ஆவேன் கடந்த சில நாட்களாக ஆடுதுறையை சேர்ந்த வினோத் என்பவர் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக தொடர்பு கொண்டும் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு தன்னிடமும், தலைமை மடாதிபதி சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ தன்னிடம் உள்ளதாகவும் தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வனதைளங்களிலும் டிவி சேனல்களிலும் மேற்படி ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதீனத்தையும் மடாபதிடையும் அவமானபடுத்தி விடுவதாகவும் தனது சார்பில் திருவெங்காடு சம்பக்கட்டளையை சேர்ந்த ரவுடி விக்னேஷ் உங்களிடம் பேசுவார் எனவும் பணம் கொடுக்காமல போலீசாரிடம் சென்றால் மேற்படி விக்னேஷ் மூலம் ரவுகளை கொண்டு மடத்தை சார்ந்தவர்களை கொலை செய் தயங்கமாட்போம் என்று ஆபாச வார்த்தைகளால் மிரட்டி பலமுறை என் கழுத்தை நெறுக்கி கொலை செய்ய முயற்சித்தனர்.
நான் உயிருக்கு பயந்து மடத்தில் உள்ளவர்களிடம் பேசி பணம் பெற்று நடுவதாக தெரிவித்தேன். பின்னார் இது தொடர்பாக கலைமகள் பள்ளி நிறுவனர் கொடியரசு, செய்யூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், திருக்கடையூர் விஜயக்குமார், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் ஆகியோர்களின் தூண்டுதலின் பேரில் வினோத் மற்றும் விக்னேஷ். ஆரியோர தன்னை தொடர்பு கொண்டு மடத்தினர் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதனை வெளியிடாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் கேட்டும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள் மேலும் அவ்வாறு அவர்கள் கேட்டும் தொகையை கொடுத்து பிரச்னை இல்லாமல் விஷயத்தை முடிக்குமாறும் விணா ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் அவர்கள் சொல்வதை செய்ய கூடியவர்கள் எனவும் எங்களை அச்சுறுத்தும் வகையில் மடாதிபதியின் நேர்முக உதவிடாளர் செந்தில் அவர்களின் கூட்டோடு மனஉளைச்சல் ஏற்படுத்துகின்றார்கள்.
இந்நிலையில் ஆதீனத்தை ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டி பணம் பறிக்க முயன்ற அகோரம் தலைமையிலான கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அகோரம் மும்பையில் சென்று பதுங்கியிருந்தார். அவரைத் தேடிச் சென்ற தமிழக போலீசார், மும்பையில் வைத்து கைது செய்துள்ளனர்.