1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : சீனாவிற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில்..!

1

அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. 

2017ல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களை மாற்றி முதல் பட்டியலையும், 2021ல் 15 இடங்களின் பெயர்களை மாற்றி இரண்டாவது பட்டியலையும், 2023ல் 11 இடங்களுக்கான பெயர்களை மாற்றி மூன்றாவது பட்டியலையும் வெளியிட்டது. தற்போது நான்காவது பட்டியலை சீனா வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது.

சீனாவால் மறுபெயரிடப்பட்ட அருணாச்சல பிரதேசத்துக்கு சொந்தமான இடங்களின் பட்டியலில் 11 மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி ஆகியவை அடங்கும். இவற்றின் பெயர்களை சீன மொழியான மாண்டரின் மொழியிலும், அதேபோல் திபெத்திய மொழியிலும் மாற்றியுள்ளது சீன அரசு. இதனை தனது அரசு நாளிதழிலும் சீனா வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் இத்தகைய நடவடிக்கையை பலமுறை கண்டித்துள்ள இந்தியா, அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி சீனாவின் செயல்களை நிராகரித்து வருகிறது. கடந்த மார்ச் 23ம் தேதி அன்று சீனா தொடர்பாக பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "சீனாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நகைப்புக்குரியது. அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் இயற்கையான பகுதி" என்று கூறினார்.

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு பெயர் மாற்றம் செய்யும் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக சீனா ஈடுபடுகிறது” என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய பெயர்களை சூட்டுவதன் மூலம் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை மாற்றிவிட முடியாது 


 

Trending News

Latest News

You May Like