1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!!

1

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நவி மும்பையில் நடந்தது.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் ஆடிய இந்தியா 104.3 ஓவரில் 428 ரன்களில் ஆல் அவுட்டானது.சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதமடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 35.3 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதற்கு அடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இங்கிலாந்து அணி 400 ரன்கள் தாண்டி மிகப்பெரிய இமாலய இலக்கை துரத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்தை இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அதிரடியாக 131 ரன்களுக்கு சுருட்டி, 347 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த 17 ஆண்டுகளில் இதுவரை தோல்வி அடைந்ததில்லை என்கின்ற சாதனையையும் தக்க வைத்திருக்கிறது.

Trending News

Latest News

You May Like