1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : ரசிகர்கள் அதிர்ச்சி : காயமடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா..!

1

உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இந்த ஆட்டத்தின் 9-வது ஓவரை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வீச வந்தார். அந்த ஓவரில் தனக்கு நேராக வந்த பந்தை காலால் தடுக்க ஹர்திக் முற்பட்டார். அப்போது தவறி கீழே விழுந்த அவருக்கு காலில் பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்திலேயே சிறிது சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், தொடர்ந்து அந்த ஓவரில் எஞ்சிய மூன்று பந்துகளை வீச முயன்றார்.

ஆனால், பந்துவீச அவரது கால் ஒத்துழைக்காததால், உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து விராட் கோலி, அந்த ஓவரின் எஞ்சிய 3 பந்துகளை விசி முடித்தார்.

Trending News

Latest News

You May Like