#JUST IN : நாளை முதல் அரையாண்டு தேர்வுகள்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/93dc117426f75ec3dd99d4e86544c6ac.webp?width=836&height=470&resizemode=4)
தென் தமிழக மாவட்டங்களில் வரலாற்றில் இல்லாத வகையில் மிகப்பெரும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நான்கு மாவட்டங்களும் தமிழகத்திலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. வெள்ள நீரோட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற முடியாமலும், மின்சாரம், குடிநீர், உணவு இல்லாமலும் மக்கள் தவித்தனர். வரலாறு காணாத மழையால் தென்காசி மாவட்ட பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது
கனமழை எதிரொலியாக நெல்லை உட்பட 5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் நாளை (டிச.20) முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும் நேற்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுத் தாள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வு ஜன. 2ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.