#JUST IN :நகைப்பிரியர்களுக்கு ஷாக்..! தங்கம் விலை ஒரேநாளில் இரண்டாவது முறையாக உயர்வு..!

ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,200 ஆகவும், கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025 ஆகவும் விற்பனை ஆனது.
இந்நிலையில், இன்று மாலை , தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 7 2,800 ரூபாய்க்குவிற்பனை ஆனது. அதேபோல், கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.9,100 ஆக விற்பனை ஆனது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்வால், ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்துள்ளது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.8,900 ஆகவும், ஒரு சவரன் ரூ.71,200 ஆகவும் விற்கப்பட்டது. இன்று காலை கிராம் ஒன்றுக்கு ரூ.125-ம், சவரனுக்கு ரூ. 1000 உயர்ந்தது.
ஆனால் மாலையில் மட்டும் தங்கம் விலை ரூ. 600 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,600 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வு, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவதாகத் தங்க மதிப்பீட்டாளர்கள் கூறி வருகின்றனர். வரும் நாள்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.