#JUST IN : பவதாரிணியின் உடலை கண்டதும் கதறி அழுத இயக்குநர் பாரதிராஜா!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/2dd847bfc7a2a3e7b2a4e6c05ac30ed4.webp?width=836&height=470&resizemode=4)
இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி காலமானார்.
47 வயதான பாடகி பவதாரணிக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இலங்கைக்குக் கூட்டிச் சென்று அங்கு அவருக்கு ஆயுர்வதேச சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. சில மாதங்களாக அங்குதான் அவர் சிகிச்சை பெற்று வந்ததாக சொல்கிறார்கள்.பவதாரணிக்கு கணவர் மட்டுமே உண்டு, குழந்தைகள் கிடையாது.
பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இவரது உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று (சனிக்கிழமை) அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா, பாடகி பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
#Watch | மறைந்த பாடகி பவதாரிணியின் உடலை கண்டதும் கதறி அழுத இயக்குநர் பாரதிராஜா!#SunNews | #RIPBhavatharini | #BharathiRaja pic.twitter.com/vgoaiNlBtU
— Sun News (@sunnewstamil) January 27, 2024