#JUST IN : பிரசார கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு..!
கரூரில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்திருந்திருக்கின்றனர். இதற்கு முன் 36 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.6 பச்சிளம் குழந்தைகள், 16 பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும் 62 பேருக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கரூர் மருத்துவமனையில் மரண ஓலம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் சிகிச்சைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.