1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்..!

Q

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் கே.ஆர்.வி. எனப்படும் கே.ஆர்.வெங்கடேஷ். இவர், பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி காவல் ஆணையரகத்தில் பண மோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த ஞாயிறன்று மதுரைக்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை கே.ஆர்.வெங்கடேஷ் சமூக வலைதளங்களில் கே.ஆர்.வெங்கடேஷ் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த தீபன் சக்ரவாரத்தி என்பவர் கே.ஆர்.வெங்கடேசன் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் குறித்து புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதனடிப்படையில், செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராஜா ராபர்ட், எண்ணூர் காவல் உதவி ஆணையர் வீரகுமார் தலைமையிலான காவல் துறையினர், கே.ஆர்.வெங்கடேசனை செங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பின் அவரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், ஓபிசி பிரிவு மாநில தலைவர் பதவியில் இருந்து வெங்கடேஷ் நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த கே.ஆர்.வெங்கடேஷ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like