#JUST IN : அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ., நினைவிடங்களை பார்க்க தடை..!!
தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்தாலும் சுற்றுலா பயணிகள் முதலில் பார்ப்பது எம்ஜிஆர் மற்றும் அண்ணா சமாதிகளாகத்தான் இருக்கும். இதிலும் தற்போது எம்ஜிஆர் சமாதியில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அண்ணா சமாதியில் கருணாநிதி நினைவிடம் இருப்பதை அடுத்து சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் இதனை பார்த்து வருகின்றனர்
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களால்இன்று ஜன.25 மற்றும் நாளை ஜன.26 முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.