1. Home
  2. சினிமா

#JUST IN : பிரபல தமிழ் நடிகர் காலமானார்..!!

#JUST IN : பிரபல தமிழ் நடிகர் காலமானார்..!!

பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகன் கதிரின் தந்தையாக நடித்தவர் தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் காலமானார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள்.இந்தப் படத்தில் ஹீரோவாக மத யானை கூட்டம், கிருமி, விக்ரம் வேதா, சிகை, சத்ரு, பிகில், ஜடா, சர்பத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கதிர் நடித்திருந்தார். கயல் ஆனந்தி ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, லிஜிஷ், ஜி மாரிமுத்து, ஷண்முகராஜன், பூ ராம், லிஸி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் கதிருக்கு அப்பாவாக தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம்தான் சினிமாவுக்கு அறிமுகமானார் நெல்லை தங்கராஜ். படத்திலும் பெண் வேடமிட்டு தெருக்கூத்துகளில் பங்கேற்கும் ஏழ்மையான நாடகக் கலைஞராக நடித்திருந்தார் நெல்லை தங்கராஜ்.

இதில் கதிருக்கு அப்பாவாக தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம்தான் சினிமாவுக்கு அறிமுகமானார் நெல்லை தங்கராஜ். படத்திலும் பெண் வேடமிட்டு தெருக்கூத்துகளில் பங்கேற்கும் ஏழ்மையான நாடகக் கலைஞராக நடித்திருந்தார் நெல்லை தங்கராஜ்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like