1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : வரும் 3ம் தேதி துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி..!

1

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளை முன்னிட்டு திமுக கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தலைமையில் பிப்.3ம் தேதியன்று அமைதிப் பேரணி நடைபெறும் என்று சென்னை மாவட்ட திமுக சார்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: 

சிம்மாசனம் போட்டுக் கொலுவீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் - தமிழ் மொழி' உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது ஓவாது பாடுபட்ட கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக பந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்ந்தி பெருமிதம் கொண்ட பெருமகன் - "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப் பெரும் தனயன் அபரியாதை சுடரொளி சாக்க வைக்கும் சொற்பொழியாளர் எழுந்து வேந்தர் -சொக்க தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் - பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு நாளினையொட்டி, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகள் அவர்கள் தலைமையில் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாது மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி 3, சனிக்கிழமை காலை 7.00னிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அஅண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.அனைத்து அணியினரும் அஞ்சலி செலுத்த திரண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1

Trending News

Latest News

You May Like