வெறும் ரூ.10,000 மாத முதலீடு போதும்... ஓய்வின் போது உங்க கையில் ரூ.3.8 கோடி இருக்கும்..!

ஒவ்வொரு மாதமும் வழக்கமான முதலீட்டுடன் ஒரு ஓய்வூதிய கார்பஸை உருவாக்க நினைத்தால், SIP ஒரு பொருத்தமான தேர்வாக இருக்கலாம். சீக்கிரமாகத் தொடங்குவது உங்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உதவும்.
நீண்ட முதலீட்டு காலம் கூட்டு வட்டி விகிதத்தில் கிடைக்கும் மூலதன ஆதாயத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது. 30 வயதில் தொடங்கும் முதலீட்டு பழக்கம் மூலம் ஒருவர் ஓய்வு காலத்தில் நல்ல வளமான ஆடம்பரமான வாழ்க்கையை வாழலாம். 60 வயது ஓய்வூதிய வயதாக இருந்தால், ஒரு SIP திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர் ஓய்வூதிய நிதியை உருவாக்க குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் கிடைக்கும். இதில் செய்யப்படும் நிலையான முதலீட்டின் மூலம், பெரிய அளவில் நிதியை உருவாக்கி, நீங்கள் ஓய்வு பெறும் நேரத்தில் கோடீஸ்வரராகலாம்.
நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 மற்றும் ரூ.10,000 மட்டுமே முதலீடு செய்தால் உங்கள் செல்வம் எவ்வாறு வளரும் என்பதை ஒரு உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம்.
மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12% மூலதன ஆதாயம் கிடைப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறும் நிலையில், 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தால், மொத்தத் தொகை ரூ.1.5 கோடியைத் தாண்டும். எளிய கணக்கீடு இதோ:
மாதம் ரூ.5,000 முதலீடு
மொத்த முதலீட்டுத் தொகை: ரூ.18,00,000
மதிப்பிடப்பட்ட மூலதன வருமானம்: ரூ.1.36 கோடி
இறுதி கார்பஸ் மதிப்பு: ரூ.1.54 கோடி
மாதம் ரூ.10,000 முதலீடு
இதேபோல், 12% வருடாந்திர வருமானத்தில் ரூ.10,000 மாதாந்திர SIP எவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் புரிந்து கொளவோம்.
மொத்த முதலீட்டுத் தொகை: ரூ.36,00,000
மதிப்பிடப்பட்ட வருமானம்: ரூ.2.72 கோடி
இறுதி கார்பஸ் மதிப்பு: ரூ.3.08 கோடி
அதாவது, SIP தொகையை ரூ.5,000 அதிகரிப்பது 30 ஆண்டுகளுக்குள் ஓய்வூதிய கார்பஸின் மதிப்பை இரட்டிப்பாக்கக்கூடும். இருப்பினும், சந்தை நிலவரங்களைப் பொறுத்து வருமானம் ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.