1. Home
  2. தமிழ்நாடு

வரும் ஜூன் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

1

நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி தேரோட்ட திருவிழா ஆனது கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். இது நெல்லையப்பர் திருக்கோவில் நிகழும் முக்கிய நிகழ்வாகும். இத்திருவிழாவை பார்ப்பதற்காகவே பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வருவார்கள். இந்த ஆண்டு ஆனித் தேரோட்டம் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. ஆனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

எனவே ஆனித் தேரோட்டம் நெல்லை மக்களின் உணர்வோடு ஒன்றிய ஒரு திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆனித் தேரோட்டம் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில் நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 21ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேர் திருவிழா ஜூன் 21 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

ஜூன் 21 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும்.

மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன் 29 வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like