ஜூன் 14ஆம் தேதி தான் கடைசி..! ஆதார் கார்டில் எல்லாம் இலவசம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/0b14f11c93e8b36a006889bedcbad82e.webp?width=836&height=470&resizemode=4)
ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்றுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். உங்கள் ஆதார் கார்டை நீங்கள் இன்னும் புதுப்பிக்கவில்லை என்றால் உடனே அதைச் செய்யலாம். 10 ஆண்டுகள் பழமையான ஆதார் கார்டில் உள்ள விவரங்களை புதுப்பிக்க ஆதார் அமைப்பு (UIDAI) ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. இலவச ஆதார் அப்டேட்டுகான காலக்கெடு ஜூன் 14ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.
உங்களுடைய ஆதார் கார்டு மிகவும் முக்கியமான அடையாள அட்டை என்பதால் அதை அப்டேட்டாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இது பல அரசு மற்றும் அரசு சாரா பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரில் உள்ள முகவரி தவறாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே அதை அப்டேட் செய்வது நல்லது.
உதாரணமாக உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும். இனி மார்ச் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆதார் கார்டில் அப்டேட் செய்வதற்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. முதலாவது- My aadhaar போர்டல். இரண்டாவது- அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேவை மையம். இங்கு செல்வதன் மூலம் உங்களுடைய ஆதார் கார்டில் பெயர், புகைப்படம், மொபைல், முகவரி போன்ற விவரங்களை புதுப்பிக்க முடியும். ஆனால் ஆதார் சேவை மையத்துக்கு நேரடியாகச் சென்றால் அப்டேஷனுக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். போர்ட்டல் மூலம் நீங்களே அப்டேட் செய்தால் பணம் செலுத்த வேண்டியதில்லை.
இலவச ஆன்லைன் ஆதார் புதுப்பிப்புக்கான காலக்கெடு முடிந்ததும் நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். ஆதாரை புதுப்பிப்பதற்கு அங்கே கட்டணம் வசூலிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு மேல் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.100, தனிநபர் தரவுகளுக்கு ரூ.50, ஆன்லைனில் ஆதார் டவுன்லோட் செய்ய ரூ.30, முகவரியை புதுப்பிப்பதற்கு ரூ.25 மற்றும் முகவரியை புதுப்பிக்க ரூ.50 என்ற அளவில் பணம் செலுத்த வேண்டும்.