1. Home
  2. தமிழ்நாடு

உடனே போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தில் சேருங்க: 10 ரூபாய் இருந்தால் போதும்.!

1

 தபால் நிலையங்களில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பல திட்டங்கள் உள்ளன. சிறியவர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் என பலருக்கும் ஏற்ற திட்டங்களை தபால் அலுவலகங்கள் வழங்கி வருகின்றன.

தபால் நிலையங்களில் பிரபலமான சேவிங்க்ஸ் ஸ்கீமாக ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டம் உள்ளது. ஃபிக்சட் முதலீடு மற்றும் பிற நீண்ட கால திட்டங்களுக்கு ரெக்கரிங் முதலீடு மாற்றாக இருக்கிறது. ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கு தற்போது 6.70 சதவிகித வட்டி வீதம் வருடத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகப்படியான லாபத்தை முதலீட்டாளர்கள் பெறலாம்.

ரெக்கரிங் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை மெச்சூரிட்டி தேதி வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த திட்டத்திற்கான கால அளவு 5 ஆண்டுகள். முதலீட்டாளர் விரும்பினால் இதனை நீட்டித்து கொள்ளலாம். இந்த வசதியும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் உள்ளது. இந்த திட்டத்தில் வட்டிக்கு வட்டி என்ற கணக்கில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டிக்கு வட்டி என்று கணக்கிடப்படும்.

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாதந்தோறும் ஒருவர் ரூ. 30,000 டெபாசிட் செய்யும் போது, ரூ. 21 லட்சம் தொகையை ரிட்டனாக பெறலாம். அதாவது முப்பதாயிரம் தொகைக்கு, ரெக்கரிங் டெபாசிட் திட்ட்டத்திற்கு வழங்கப்படும் 6.7% வட்டி விகிதத்தில் ரூ. 3,40,974 கொடுக்கப்படும். இதன் மூலமாக 5 ஆண்டுகளில் முதலீட்டு தொகை மற்றும் வட்டியும் சேர்த்து ஐந்தாண்டு மெச்சூரிட்டி காலத்திற்கு பிறகு ரூ. 21,40,074 தொகை முதலீட்டாளருக்கு கிடைக்கும்.

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 5 வருடங்களுக்கு பிறகு முதலீட்டாளர் விரும்பினால் மேலும் நீட்டித்து கொள்ளலாம். ஐந்தாண்டுகள் நீட்டித்து கொள்வதன் மூலம் வருமானமும் அதிகரிக்கும். குறைந்தபட்சமாக 10 ரூபாய் என முதலீடு செய்து இத்திட்டத்தில் ஒருவர் இணையலாம். அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இந்தியாவில் வசிக்கும் எவராக இருந்தாலும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like