1. Home
  2. தமிழ்நாடு

நகைக் கடன் தள்ளுபடி.. அடமான நகைகளை திரும்ப வழங்க அரசு முடிவு..!

நகைக் கடன் தள்ளுபடி.. அடமான நகைகளை திரும்ப வழங்க அரசு முடிவு..!


கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தொடர்பான ஆய்வை 10 நாட்களில் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கலுக்கு அடமான நகைகளை திரும்ப வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தங்க நகைகளுக்கு அடமான கடன் வழங்குகின்றன. அவற்றில், 5 சவரன் வரை பெற்ற நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக - அதிமுக சார்பில், நகை கடன் தள்ளுபடி தொடர்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனால், அந்த சலுகையை பெற, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றனர். சிலர், வங்கி அதிகாரிகள் துணையுடன் போலி நகைகளை அடகு வைத்தும் கடன் பெற்றனர்.

இதையடுத்து, கூட்டுறவு சங்க நகைக்கடன்களை ஆய்வு செய்யுமாறும், அந்த பணிகளை நவம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்குமாறும் கூட்டுறவு துறை உத்தரவிட்டது. ஆனால், நகைகளை அடகு வைத்தவர்கள், தங்களின் நகைகளை திரும்ப வழங்கக்கோரி கூட்டுறவு வங்கிகளுக்கு சென்றபடி உள்ளனர்.

இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் நகைக் கடன் ஆய்வை முடிக்க அதிகாரிகளுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடன் தள்ளுபடி சான்று மற்றும் அடகு வைத்த நகைகளை பொங்கல் அன்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like