ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை..!

வங்கியில் இருந்து கடன் பெற்று மோசடி செய்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், நரேஷ் கோயல் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து நரேஷ் கோயலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.
வங்கியில் 538 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று (செப்டம்பர் 02) காலை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
கடும் நஷ்டத்தைச் சந்தித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது. திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 2021- ல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஜாலான் கால்ராக் நிறுவனம் வாங்கியுள்ளது.