1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : பிப்.14, 15ல் ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க ஆணை..!

Q

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நகைகளை கர்நாடக மாநிலம், தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் விசாரணையின்போது ஜெ.தீபா தரப்பில், தான் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசு என வாதிடப்பட்டது. இதற்கு கர்நாடக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி “சட்டப்பூர்வ வாரிசாக இருப்பதாலேயே ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு இந்த நகைகளை வழங்க முடியாது. இவ்வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளன” எனக்கூறி, அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த அனைத்து நகைகளையும் பிப்.14, 15ல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் ஆணையிட்டது.

Trending News

Latest News

You May Like