1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் மக்களிடம் கருத்து கேட்பு : ஜெயக்குமார் பேட்டி..!

1

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாராளுமன்றத்தேர்தல் கூட்டணிக்கு பா.ஜ.க. இல்லாத கட்சிகளை வரவேற்கிறோம். கூட்டணிக்கு பெரிய கட்சிகள் பல பேசிக் கொண்டிருக்கின்றன. சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களை சந்தித்து கருத்துக் கேட்க உள்ளோம். 

இன்று முதல் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம். மண்டலம் வாரியாக மக்களை சந்தித்து கருத்து கேட்கிறோம். இன்று 5-ம் தேதி வேலூர் மண்டலம், 6-ம் தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.

மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இ-மெயில் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அனுப்பலாம். 10 பேர் கொண்ட குழுவும், நேரடியாக சென்று மக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளோம். இன்று சென்னை, வேலூர் மண்டலங்களில் கருத்து கேட்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like