ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் திடீர் மரணம்...ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த ஓராண்டாக உணவுக்குழாய் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார் ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஒசாமு நிஷிமுரா . மிகக் கடுமையாக அவதிப்பட்டு வந்த ஒசாமு தனது 53 வயதில் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு புற்றுநோய் பாதிப்பு 4 வது ஸ்டேஜில் தான் கண்டறியப்பட்டது. இருப்பினும் கடந்த டிசம்பர் மாதம் வரை மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு சக வீரர்கள், உறவினர்கள், நண்பர்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.