நாம் தமிழர் கட்சிக்கு ஒரு நிறுவனம் தேர்தல் வியூகம் வகுக்க உள்ளது - ஜெகதீசன் பாண்டியன் போட்டு உடைத்த தகவல்!

நாம் தமிழர் கட்சிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் வியூகம் வகுக்க உள்ளதாக நாதகவிலிருந்து விலகிய ஜெகதீசன் பாண்டியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விஜய் அவர்கள் வியூக அமைப்பாளர் பிரசந்த்கிஷோரை அழைத்து ஆலோனை செய்வதை விமர்சிக்கும் நபர்களுக்கு தெரியாது, 2019 மக்களவைத் தேர்தல், 2021சட்ட சபைத் தேர்தல், 2023 ஈரோடு இடைத் தேர்தல் மற்றும் கட்சி நடவடிக்கைகள் (அறிக்கைகள், வடிவமைப்புகள், எந்த பிரச்சனைக்கு ஆர்பாட்டம், போராட்டம் செய்யவேண்டும், வாசகங்கள் என்ன இடம் பெற வேண்டும், அண்ணன் பேசுகிற நெஞ்ச்(பஞ்ச்) டயாலக்குகள் அனைத்தும் ஜான் ஐயாவின் அலோசனையின் பேரில்தான் நடந்தது!
கட்சியில் உள்ள முக்கியப்பொறுப்பாளர்கள் அனைவருக்கும் இது நன்றாகவே தெரியும்! தம்பி திரைக்களத்திற்கும், இராவணன் குடிலுக்கும், அண்ணன் வீட்டிற்கும் அடிக்கடி சென்று அலோசனை வழங்கினார்.
தமிழ்த் தேசியத்தின் பற்றாலும், தலைவர் மீதுள்ள அளவுகடந்த அன்பாலும் எந்தத் தொகையும் பெற்றுக்கொள்ளாலமல் ஆலோசனை வழங்கி உதவினார். இதையெல்லாம் இப்போது அண்ணனோடு நெருக்கமாக இருப்பது போல் நடிப்வர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பவர்கள், என் அலைபேசியையும், என் குடும்பத்தார் அலைப்பேசியையும் திருட்டுத்தனமாக எனது அலைப்பேசி விபரங்களை திருடியவர்கள், அண்ணன் அலைப்பேசியையும், பாக்கியராஜ், அண்ணன் இரவணன் அலைப்பேசி விபரங்களையும், வாட்ஸ் அப் விபரங்களையும் ஆராய்ந்தால் கிடைத்து விடும்.
எனது உறவுகள் உணர்சிவசம்படாமல் அண்ணன் மட்டுமே சர்வலோக நிவாரனி என்று கருதாமல் ஐயா ஜான் ஆரோக்கியசாமி போன்ற என்னற்ற ஆலோசகர்கள் உதவியிருக்கிறார்கள்.
இன்னொரு உண்மையையும் சொல்கிறேன், 2026 இந்த தேர்தலுக்கும் ஒரு வியூக அமைப்பு நிறுவனத்திடம் மிகப் பெரிய புத்திசாலி தமிழகத்தின் சந்து பொந்துகள் அறிந்த ரங்கராஜ் பாண்டேவிடம் பணியை கொடுக்காமல் வேறு நிறுவனத்திடம் அண்ணன் சீமான் அவர்கள் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் . (அவர்கள் வேலை பறிபோய்விடக்கூடது என்பதற்காக அவர்கள் பெயரை வெளியிடவில்லை) ஆகையால் கட்சிக்கு உழைத்தவர்களை விமர்சிப்பது போல், கட்சிக்கு வெளியிலிருந்து உதவியர்கள்மீதும் உழைத்தவர்கள் மீதும் அவதூறு பரப்பாதீர்கள்!” என்று தெரிவித்துள்ளார்.