1. Home
  2. தமிழ்நாடு

ஜன.6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு!

ஜாக்டோ ஜியோ

அரசுடனான பேச்சுவார்த்தைத் தோல்வி அடைந்துள்ள நிலையில், வரும் ஜனவரி 6ம் தேதி முதல், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளனர். 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் முழுமையாக பங்கேற்கும் வகையில் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், பீட்டர் ஆரோக்யராஜ், தமிழ் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் நீதிராஜா தொடக்கவுரை நிகழ்த்தினார்.

ஜனவரி மாதம் நடைபெறும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் அனைவரும் கருப்பு அட்டை அணிந்து முழுமையாக பங்கேற்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Trending News

Latest News

You May Like