1. Home
  2. தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் – வெளியானது குட் நியூஸ்!!

ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் – வெளியானது குட் நியூஸ்!!


பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களில், விரைவில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளிகளில், பல்வேறு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சுமார் 400 பணியிடங்கள் காலியாக உள்ளதாக பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அபுதாபி நகரில், தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் – வெளியானது குட் நியூஸ்!!

ஒரு சில பள்ளி நிர்வாகங்கள், அடுத்த கல்வி ஆண்டை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என்ற அறிவிப்பு வெளியிட்டு உள்ளன. சில பள்ளிகளில், முதல்வர், துணை முதல்வர் போன்ற பணியிடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வடிவமைப்பு தொழில்நுட்பம், கணினி அறிவியல், அறிவியல், ஆங்கிலம், பொருளாதாரம் மற்றும் வணிகப் படிப்புகள் போன்றவற்றில் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளதாக அரசுத் தரப்பிலும், பள்ளி நிர்வாகங்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் – வெளியானது குட் நியூஸ்!!

துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட நகரங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிரியர்களின் சம்பளம் ஒரு பள்ளிக்கு மற்றொரு பள்ளிக்கு மாறுபடும்.

எனினும், ஆசிரியர்களுக்கு வரியில்லா சம்பளம், தங்குமிடம், மருத்துவக் காப்பீடு மற்றும் வருடாந்திர விமான டிக்கெட்டுகள் கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்திய ரூபாய் மதிப்பில், ஆசிரியர்களுக்கு, மாதம் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like