1. Home
  2. தமிழ்நாடு

பெரும் சோகம்..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

1

கோவை செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வந்துள்ளார் ராமச்சந்திரன். இவரது மனைவி விசித்ரா. இந்த தம்பதிக்கு ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகிய 2 மகள்கள் இருந்துள்ளனர்.

இளைய மகள் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மூத்த மகள் கனடாவில் மேற்படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கோவை வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் இன்று ராமச்சந்திரனின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த பொழுது ராமச்சந்திரன் அவரது மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகிய 4 பேரும் விஷம் குடித்து உயிரிழந்து கிடந்துள்ளனர்.

அதையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், ராமச்சந்திரன் குடும்பம் புதிதாக பெரிய அளவில் வீடு கட்டி வந்த நிலையில், அதற்காக வாங்கிய கடன் தொல்லை அதிகரித்ததன் காரணமாக, 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like