1. Home
  2. தமிழ்நாடு

ஒரு மணி நேரம் தான் கெடு..! உடனே பேனர், கொடிக்கம்பங்களை அகற்றுங்கள்..!

Q

மதுரையில் பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகளையோ, நீதிமன்றங்களின் உத்தரவுகளையோ யாரும் பொருட்படுத்துவதில்லை. போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைகளில், விளம்பர போர்டுகள் வைப்பது தொடர்கிறது.

இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை 'அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும் உத்தரவிட்டனர்.

அனைத்து பேனர்கள், கொடிக் கம்பங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மணி நேரம் மாநகராட்சி போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் மதுரை கிளை அவகாசம் வழங்கியது.

அதுமட்டுமின்றி, 'மதுரையில் தற்போது ஏராளமான கொடிக் கம்பங்கள், பேனர்கள் உள்ளன. நேரில் ஆய்வு செய்ய நாங்கள் தயார்' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like