1. Home
  2. தமிழ்நாடு

இன்னும் 4 நாட்கள் தான் டைம்...கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு..!

1

கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆத்திரமடைந்த கனடா அரசு கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக டில்லியில் பணியாற்றிய அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்றியது. அதிகாரிகளின் எண்ணிக்கையையும் குறைக்க உத்தரவிடப்பட்டது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.இதையடுத்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வெர்மா மற்றும் தூதரக அதிகாரிகளுக்கும் பிரிவினைவாத தலைவர் கொலைக்கும் தொடர்பிருப்பதாக அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியது பரபரப்பை அதிகரித்தது.

இந்த சூழலில் கனடாவிற்கான இந்திய தூதர் மற்றும் அதிகாரிகளை திரும்ப பெற்று கொள்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள்,

  1. ஸ்டீவர்ட் ரோஸ் வீலர், ஆக்டிங் ஹை கமிஷனர்
  2. பாட்ரிக் ஹெபர்ட், துணை ஹை கமிஷனர்
  3. மேரி கேதரின் ஜோலி, முதல் செயலாளர்
  4. ஐயன் ரோஸ் டேவிட் ட்ரைடெஸ், முதல் செயலாளர்
  5. ஆடம் ஜேம்ஸ் சுல்ப்கா, முதல் செயலாளர்
  6. பவுலா ஓர்ஜுவாலா, முதல் செயலாளர்

இவர்கள் அனைவரும் வரும் 19ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா - கனடா இடையில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக செய்திக் குறிப்பில், கனடாவில் உள்ள இந்திய தூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை. கனடா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் தூதர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக இருக்கிறது.

தீவிரவாதம், வன்முறை, பிரிவினைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் இவற்றுக்கு ஆதரவாக கனடா அரசு உள்ளது. இதற்கான பதில் நடவடிக்கைகளில் ஈடுபட இந்தியாவிற்கு உரிமை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like