1. Home
  2. தமிழ்நாடு

இன்னும் ஒரு நாள் தான்.. சென்னைக்கு பெரிய சம்பவம் வெயிட்டிங்!

1

நாளை 15 ஆம் தேதி அந்தமானை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலரான செல்வகுமார் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி எப்படி இருக்கும்? அதன் மூலம் எந்தளவுக்கு மழை கிடைக்கும்? அதனால் தமிழகத்தில் எப்போது மழை தொடங்கும்? எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவலை கூறியுள்ளார்.

அதன்படி, அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகம் போதே Well Marked Low Pressure அதாவது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகதான் இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் செல்வகுமார் கூறியுள்ளார்.

நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகும் இந்த அமைப்பு பயணிக்கும் வழியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிடும் என்றும் தமிழ்நாடு கரையோர பகுதியை நெருங்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறியுள்ளார். இந்த அமைப்பு நிறைய மழைப்பொழிவை கொடுக்கும் என்றும், 16 ஆம் தேதி மதியத்தில் இருந்து மழைப்பொழிவு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு 16 ஆம் தேதி மதியம் முதல் மழை பொழிவு இருக்கும் என்றும் சென்னைக்கு 16 ஆம் தேதி மாலை முதல் மழை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 20 ஆம் தேதி வரை அந்த நிகழ்வு தமிழக கரையை ஒட்டிதான் இருக்கும், கரையை கடக்கும் வரை நிறைய மழை பொழிவை கொடுக்கும் என்றும் ஆனால் வலுவிழந்துதான் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய காற்றழுத்தம் காரணமாக சென்னைக்கு 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நல்ல மழை பொழிவு இருக்கும் என்றும் இதனைத் தொடர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்திற்கு அடுத்தடுத்து நல்ல மழை பொழிவு உள்ளது என்றும் தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like