1. Home
  2. தமிழ்நாடு

வெறும் டீஹைடிரேஷன் தான்:டிஸ்சார்ஜ் ஆனார் இசைப்புயல்..!

Q

லண்டனில் இருந்து நேற்று சென்னை திரும்பிய ஏ.ஆர். ரஹ்மானுக்கு என்ன நடந்தது என்பது தெரிய வந்திருக்கிறது. புனித ரமலான் மாதத்தில் நோன்பு வைத்து வருகிறார் இசைப்புயல். இந்நிலையில் பயணம் செய்து வந்த அவருக்கு அசவுகரியமாக இருந்திருக்கிறது.

இதையடுத்தே அப்பல்லோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றாராம். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் dehydration ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். மற்றபடி நெஞ்சுவலியோ, கழுத்து வலியோ இல்லை. ஏ.ஆர். ரஹ்மான் நலமாக இருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் நலமாக இருப்பதாக அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து மருத்துவர்களிடம் பேசி நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் நலமாக இருப்பதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக ட்வீட் செய்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அவரை ட்வீட்டை பார்த்த பிறகே ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை பற்றி பயப்படத் தேவையில்லை. அவர் நலமாக இருக்கிறார் என இசைப்புயலுக்கு நெருக்கமானவர்களும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை குறித்து ஒரு ட்வீட் போட்டு தங்கள் கவலையை தீர்த்து வைக்குமாறு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரிடம் ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இசைப்புயல் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். அவருக்கு எதுவும் இல்லை, எதுவும் ஆகாது. யாருக்கும் தீங்கு நினைக்காதவர் நம் இசைப்புயல். அவருக்கு இறைவன் இருக்கிறார். அதனால் தேவையில்லாத விஷயங்களை பேச வேண்டாம், பரப்ப வேண்டாம் என ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தன் உடம்புக்கு ஒன்னும் இல்லை என ஏ.ஆர். ரஹ்மானே விரைவில் ட்வீட் போடத் தான் போகிறார். அதை நாம் பார்த்து சந்தோஷப்படத் தான் செய்யப் போகிறோம் என்கிறார்கள் ஆஸ்கர் நாயகனின் ரசிகர்கள்.

இந்நிலையில் dehydration அறிகுறிகளுடன் வந்த ஏ.ஆர். ரஹ்மான், வழக்கமான பரிசோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

Q

Trending News

Latest News

You May Like