1. Home
  2. தமிழ்நாடு

அட கொடுமையே..! குளுக்கோஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தப்பட்ட மாப் குச்சி – டிடிவி தினகரன் கண்டனம்..!

1

காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி அருகாமையில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் வருவது இந்த காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு தான்...

காய்ச்சலுக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு என தனித் தனி வார்டுகள் உள்ளன. காய்ச்சலுக்கான ஆண்கள் வார்டில் 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 12 படுக்கைகளும் மட்டுமே உள்ளன. இதனால் வைரஸ் காய்ச்சல், டெங்குகாய்ச்சல் மற்றும் கொரோனா தொடர்பான காய்ச்சல் என வருபவர்களுக்கு தனித்தனி பிரிவுகள் இல்லாத நிலை உள்ளது. அந்த நோயாளிகளுக்கும் பொது வார்டில் வைத்து சிசிச்சை அளிக்கும் நிலை உள்ளது. இதனால் பொது வார்டில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இங்குப் படுக்கைக்கு அருகே "குளுக்கோஸ் ஏற்றுவதற்குரிய தனி ஸ்டேண்ட் பொருத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாகத் தரையைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் மாப்-பின் அடிக்குச்சியைக் கட்டிலுடன் சேர்த்து கம்பி வைத்துக் கட்டி ஸ்டாண்டாக பயன்படுத்துகின்றனர். 

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தரையை துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியை குளுக்கோஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் நிலையில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட அம்மருத்துவமனையில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தரையை துடைக்க உதவும் மாப் குச்சியை (Mop Stick) குளுக்கோஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தும் புகைப்படம் சுகாதாரத்துறையின் அவலநிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஏழை, எளிய மக்கள் நாடி வரும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என எழுந்த அடுக்கடுக்கான புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததே மருத்துவமனைகளில் நடைபெறும் தொடர் சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தேவையான அடிப்படை உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like