1. Home
  2. தமிழ்நாடு

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல... வரலாறு காணாத அளவு உயர்ந்தது தங்கம் விலை..!

1

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அந்த வகையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250-க்கும்,  சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது.

இந்நிலையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390-க்கும்,  சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் முதன்முறையாக ரூ. 50,000ஐ கடந்து விற்பனையானது. இந்நிலையில்,  புதிய உச்சத்தை அடைந்ததால், தங்கம் வாங்குவோரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள், சாமனியர்கள் தொடர் விலை உயர்வால் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like