சமூக வலைதளங்களில் மனிதர்களின் நடத்தையை பார்த்தால் வியப்பாக உள்ளது..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் தளத்தில், “சமூக வலைதளங்களில் மனிதர்களின் நடத்தையை பார்த்தால் வியப்பாக உள்ளது; அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு தற்போது வைரலாகிவருகிறது. முன்னதாக, கிருத்திகா உதயநிதி மங்கை என்ற படத்தை இயக்கியுள்ளார் என்ற தகவல் வெளியானது.
பின்னர், இதில் உண்மை இல்லை எனவும் மங்கை படத்தை அமைச்சர் குபேந்திரன் காமாட்சி என்பவர் இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மங்கை படத்தில் கயல் ஆனந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மங்கை படத்தை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். இவரை ரூ.2500 கோடி போதைப் பொருள் விவகாரத்தில் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
மேலும் மங்கை படம் முழுக்க முழுக்க போதைப் பொருள் விற்ற பணத்தில் தயாரிக்கப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜாபர் சாதிக் மங்கை படம் தவிர இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
I'm fascinated by human behaviour on social media. Everyone has gone a bit mad :)
— kiruthiga udhayanidh (@astrokiru) March 10, 2024