1. Home
  2. தமிழ்நாடு

இன்று தாலிச்சரடு மாற்ற நல்ல நேரம் இது தான்..!

1

வருடத்தின் அனைத்து நாட்களும், அனைத்து மாதங்களும் திருவிழா நடக்கும் ஒரே கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான். மதுரையில் 6 மாதங்கள் மீனாட்சி ஆட்சியும், மீதமுள்ள 6 மாதங்கள் சிவ பெருமானின் ஆட்சியும் நடைபெறுவதாக ஐதீகம். மதுரையில் வருடம் முழுவதும் திருவிழா நடக்கும் என்றாலும் வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். சித்திரை திருவிழாவின் போது ஆண்டுதோறும் அன்னை மீனாட்சிக்கு மதுரையின் அரசியாக பட்டாபிஷேகமும், மறுநாள் சுந்தரேஸ்வரரான சிவ பெருமானுடன் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுவது வழக்கம்.


மீனாட்சி திருக்கல்யாணத்தை காண்பதால் நமக்கு அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். திருமண தடை உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும். மாங்கல்ய தோஷம் உள்ளிட்ட தோஷங்கள், பாவங்கள் அனைத்தும் நீங்கும். வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி நிலைக்கும். வீட்டில் மங்களம் பெருகும். அன்னையின் அருளால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் மே 08ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. முடிந்தவர்கள் மதுரைக்கு நேரில் சென்று அன்னை மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் மணக்கோலத்தில் தரிசித்து விட்டு வரலாம்.


மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் சென்று பார்க்க முடியாதவர்கள் வீட்டில் தொலைக்காட்சி வழியாக பார்க்கலாம். நம்முடைய வீட்டில் உள்ள மீனாட்சி அம்மனின் படத்திற்கு வாசனை மலர்கள் சூட்டி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கலாம். அன்னைக்கு ஏதாவது இனிப்பு நைவேத்தியம் செய்து படைக்கலாம். பாயசம், சர்க்கரை பொங்கல் என எது வேண்டுமானாலும் படைக்கலாம். முடியாதவர்கள் எளிமையாக வெற்றிலை பாக்கு, ஒரு வாழைப்பழம், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ போன்ற மங்கள பொருட்கள் படைத்து வழிபடலாம். அன்றைய தினம் ஏதாவது சுமங்கலி பெண்களுக்கு தாலிச்சரடு, குங்குமம் வாங்கி தானமாக கொடுப்பது நல்லது.


மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் போது பெண்கள் பலருக்கும் தாலிச்சரடு மாற்றிக் கொள்ளும் வழக்கம் உண்டு. இதனால் மீனாட்சியின் அருளால் அவளை போலவே நமக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். மங்களமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. அதனால் இந்த ஆண்டு தாலிச்சரடு மாற்ற நினைப்பவர்கள் காலை 08.35 மணிக்கு மேல் 08.59 மணிக்குள்ளான முகூர்த்த நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம். இந்த ஆண்டு வியாழக்கிழமை திருக்கல்யாணம் வருவதால் காலை 6 முதல் 07.30 மணியிலான நேரம் எமகண்டம் நேரமாகும். அது முடிந்த பிறகு பூஜை அறையை அலங்கரித்து தயார் செய்து வைத்து விட்டு, தாலிச்சரடில் திருமாங்கல்யம் ஆகியவற்றை கோர்த்து தயாராக சுவாமி படத்திற்கு முன்பு வைத்து விடலாம். அன்னை மீனாட்சிக்கு திருமாங்கல்ய தாரனம் நடைபெற்று முடிந்த பிறகு சுவாமி படத்திற்கு முன்பு வைத்த மாங்கல்யத்தை கணவரை கையாலோ அல்லது அன்னை மீனாட்சியை வேண்டிக் கொண்டு நீங்களாகவே எடுத்து அணிந்து கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like