1. Home
  2. தமிழ்நாடு

அது பல சிக்கல்களை உருவாக்கும்... ரஜினி பெயரில் உலா வரும் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் !

அது பல சிக்கல்களை உருவாக்கும்... ரஜினி பெயரில் உலா வரும் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் !


அடுத்தாண்டு சட்டப்பேரவைக்கு தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். ஆனால் ரஜினி கட்சி தொடங்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனையும் ரஜினி கூறவில்லை. அவரது ஆதரவாளர்கள் எனக்கூறிக்கொள்ளும் சிலர் பரப்பி வருகின்றனர்,

சில ஆண்டுகளாகவே திரும்ப திரும்ப அதையே கூறி வருவதால் தமிழக மக்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ஒரு நீண்ட அறிக்கை ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து மக்கள் சொல்லும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வேன். என் உடல்நலம் முக்கியம் இல்லை போன்றவை குறித்து கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்கு கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ந் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.

அது பல சிக்கல்களை உருவாக்கும்... ரஜினி பெயரில் உலா வரும் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் !

இந்த கொரோனா பிரச்சினையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை.

2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.

அது பல சிக்கல்களை உருவாக்கும்... ரஜினி பெயரில் உலா வரும் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் !

கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத நிலையில் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், ‘கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது, வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்கு செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா? என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது 70. உங்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால் இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.

அது பல சிக்கல்களை உருவாக்கும்... ரஜினி பெயரில் உலா வரும் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் !

எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்து தான் கவலை. நான் தொடங்குவதோ புது கட்சி. மக்களை நேரில் சந்திக்காமல், மாநாடுகள் நடத்தாமல், பொதுக்கூட்டங்கள் கூட்டாமல் வெறும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால், நான் எதிர்பார்க்கும் அரசியல் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கி அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல்நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்.

இதை இப்போதே சொல்ல காரணம், என்னை ஆதரிப்போரின் மத்தியில் நான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில், இந்த கொரோனா பிரச்சினை தொடரும் நிலையில், கடைசி நேரத்தில் இந்த காரணங்களை காட்டி ஒருவேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.

நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ந் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.

எனவே அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, என் உடல்நலத்தில் அக்கறையுள்ள என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய ரசிகர்களும், மக்களும் என்னை என்ன முடிவு எடுக்க சொன்னாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். மக்கள் தீர்ப்பே. மகேசன் தீர்ப்பு.

வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!! அன்புடன் ரஜினிகாந்த். இவ்வாறு அந்த அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

அது பல சிக்கல்களை உருவாக்கும்... ரஜினி பெயரில் உலா வரும் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் !

ரஜினிகாந்தின் இந்த அறிக்கை உண்மையானால் அவரின் அரசியல் நுழைவு மற்றும் புதிய கட்சியைத் தொடங்குவது மிகவும் சந்தேகத்திற்குரியது. ஆனால் இந்த அறிக்கை தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பில் உறுதி படுத்தவில்லை.

newstm.in

Trending News

Latest News

You May Like